பிரட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கிலோ,

நைசாக பொடித்த சர்க்கரை - 50 கிராம்,

ஈஸ்ட் - 1 தேக்கரண்டி,

உப்பு - 1 தேக்கரண்டி,

வெண்ணெய் - 15 கிராம்.

செய்முறை:

மைதாவை நன்கு சலிக்கவும்.

ஈஸ்டை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

சலித்த மைதாவை 3 பங்காக பிரிக்கவும்.

பிரித்த மாவில் ஒரு பங்கை மட்டும் தனியாக எடுக்கவும்.

அதில் ஈஸ்ட் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, கெட்டியாக பிசைந்து மூடி, 10 மணி நேரம் ஊற விடவும்.

10 மணி நேரம் கழித்து, மீதமுள்ள இரண்டு பங்கு மைதாவுடன் உப்பு, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

இதனுடன் ஏற்கனவே புளிக்க வைத்த மாவை சேர்க்கவும்.

இதனுடன் மேலும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும் (பிசைந்த மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் தளர இருக்க வேண்டும்).

ப்ரட் செய்யும் அச்சில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் போட்டு, பாதி அச்சிற்கு பிசைந்த மாவை போட்டு, 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

மாவு உப்பி, அச்சின் முழு அளவிற்கு வந்து விடும்.

இதை அப்படியே அவனில் வைத்து, 400 டிகிரியில் 25 நிமிடம் பேக் செய்யவும்.

25 நிமிடம் கழித்து, பேக் செய்யப்பட்டதை அச்சிலிருந்து சூடு ஆறுவதற்கு முன் அப்படியே ஒரு தட்டில் கொட்டி விடவும் (ஆறினால் ப்ரட் அச்சுடன் ஒட்டிக் கொள்ளும்).

ப்ரட் சூடாக இருக்கும் போதே, ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, ப்ரஷ்ஷால் தொட்டு, ப்ரட்டின் மேலே தடவினால், பளபளப்பாக இருக்கும் (முட்டை பிடிக்காதவர்கள் வெண்ணெய் அல்லது சுகர் சிரப்பை தடவலாம்).

குறிப்புகள்: