கோதுமை சேமியா பிரியாணி





தேவையான பொருட்கள்:
கோதுமை சேமியா - 250 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பீன்ஸ் - 3
கேரட் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று,
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,
காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்)
உருளைக்கிழங்கு - ஒன்று
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுதுது கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.