கருணைக்கிழங்கு குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - சின்ன கிழங்கில் பாதி

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10 பல்

தக்காளி - 1

புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

தேங்காய் துருவல் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, வெந்தயம் - சிறிது

மிளகாய் வற்றல் - 2

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

கிழங்கை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளியும் நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

இத்துடன் கிழங்கு, தக்காளி சேர்த்து மூடி தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.

இத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தேவையான நீர் விட்டு பொடி வாசம் போக கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து காயும் வெந்ததும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கடைசியாக தேங்காய் துருவலை தேவையான நீர் விட்டு நைசாக அரைத்து ஊற்றி எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய் அரைத்து ஊற்றாமலும் இதே போல் செய்யலாம்.