துவரை தோசை





தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 கிலோ
புழுங்கல் அரிசி - 1/4 கிலோ
புதினா - 100 கிராம்
சோம்பு - 20 கிராம்
பச்சை மிளகாய் - 7
இஞ்சி - சிறிதளவு
கடலெண்ணெய் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரை, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து மை போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
புதினாவை ஆய்ந்து, சோம்பைத் தூளாக்கி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். தேவையான உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
தோசை கல்லில் மாவினை ஊற்றி, தோசை வார்த்து எண்ணெய் ஊற்றி நன்கு சிவந்ததும் புரட்டி போட்டு எடுக்கவும். எடுத்த பிறகு சூடாக பரிமாறவும்.