மரவள்ளிக் கிழங்கு உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு - 4

தேங்காய் பூ - 2 கைப்பிடி/விருப்பத்திற்கு ஏற்ப

சீனி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கிழங்கை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அவித்துக் கொள்ளவும்.(மென்மையாக ஆகும் வரை)

கிழங்கு வெந்தவுடன் ஆற விடவும்(மிதமான சூடு ஆகும் வரை)

மிதமான சூடாக இருக்கும் போது கிழங்கை மத்தை கொண்டு இடிக்கவும்(உதிறியாகும் வரை). கிழங்கில் உள்ள நாற் பகுதியை எடுத்து விடவும்.

இடித்து வைத்துள்ள கிழங்கில் தேவையான சீனி மற்றும் தேங்காய் பூவை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து பரிமாறலாம்.

குறிப்புகள்:

இதனை கோதுமை மாவு கரைசலில் இட்டு எண்ணெயில் பொறித்துக்கூட சாப்பிடலாம். மொரு மொருப்பாக வேண்டுமென்றால் சிறிது அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும். மிகவும் சுவையாக இருக்கும்