பூண்டு காரா சேவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைமா - 1 கப்

அரிசிமா - 1/2 கப்

பூண்டு - 6 பல்

பச்சை மிளகாய் - 4

மிகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மிளகுப்பொடி - 1 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

பூண்டையும், பச்சை மிளகாயையும் விழுதாக அரைக்கவும்.

இந்த விழுதை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

கடலைமா, அரிசிமா, மிளகுப்பொடி, வெண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

விழுதுத் தண்ணீரை சேர்த்து கெட்டியாக பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும்.

முறுக்கு அச்சு பிடியில் காராசேவ் வில்லையை போட்டு தயாராக வைக்கவும்.

அச்சுப் பிடிக்குள் மாவை திணித்து சூடான எண்ணெயில் பிழியவும்.

எண்ணெய் ஓசை அடங்கியதும் காரா சேவினை வடித்து எடுக்கவும்.

சுவையான காராசேவ் தயார்.

குறிப்புகள்: