தொதல் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பால் - 2 டின்

சிவப்பு அரிசிமா - 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)

தண்ணீர் - 1 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)

சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி - 400 கிராம் (அல்லது தேவையான இனிப்புக்கு ஏற்ப)

வறுத்த உடைத்த பயறு - ஒரு கைப்பிடி

கஜு (முந்திரி) - 25

பட்டர் - 1 தேக்கரண்டி

வனிலா/ஏலக்காய் - சிறிது

செய்முறை:

கஜுவை பட்டரில் வறுத்து எடுக்கவும்.

கித்துள்/சர்க்கரையை சிறிய துண்டுகளாக நொருக்கவும். பிரவுண் சீனியாயின் அப்படியே போடலாம்.

பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சிவப்பு அரிசிமா, தண்ணீர், சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி, பயறு என்பவற்றை ஒன்றாக கலந்து சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.

எண்ணெய் பிறந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய்/வனிலா, கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரவி ஆற விடவும்.

சுவையான தொதல் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

கலவையை அடுப்பில் வைத்து கிளறும் போது கலவை கொதித்து தெறிக்கப் பார்க்கும். எனவே கைக்கு உறை போட்டு அல்லது நீண்ட கைப்பிடி உள்ள கரண்டி/அகப்பையால் கிளறவும்.கலவை நன்கு சுருள 40 - 45 நிமிடங்கள் எடுக்கும் கலவை நன்கு சுருண்டதும் தேங்காய் எண்ணெய் பிறக்கும். அதனை வடித்து எடுத்து விடலாம். உடனே சாப்பிடுவதை விட வைத்து அடுத்த நாள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். :)