கோதுமை சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இரண்டாக உடைத்த கோதுமை - இரண்டரை கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - இரண்டு

பச்சைமிளகாய் - இரண்டு (சிறிய மிளகாய் என்றால் 3)

இஞ்சி பூண்டு விழுது - ஒரு கரண்டி

மிளகாய்தூள் - ஒரு கரண்டி

கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

பசும்பால் - 3 கப்

தண்ணீர் - 3 கப்

எண்ணெய் + நெய் - 4 கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு

அன்னாசிப்பூ - ஒன்று

ஜாதிப்பூ - ஒன்று

கேசரி கலர் - ஒரு சிட்டிகை

உப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூக்களை போட்டு தாளிக்கவும்.

பின்பு நறுக்கின வெங்காயம் போட்டு உப்பு போடவும். இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து கிளறி இஞ்சி பூண்டு விழுது, மிளகாயை போடவும்.

பின் மிளகாய்தூள், மசாலாத்தூள், கேசரி கலர் போட்டு கிளறவும். அதில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்ததும் கழுவிய கோதுமையை போட்டு கிளறி, மூடி போட்டு வேக விடவும்.

இடை இடையில் கிளறி விடவும். பின்னர் கோதுமை நன்கு வெந்ததை உறுதி செய்துகொண்டு அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: