அயாம் பெஞ்ஞெத்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - கால் கிலோ ஃப்ரெஷ் மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு தனியா விதை - 2 தேக்கரண்டி பூண்டு - 3 பல் இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு லெங்குவாஸ் (ஃப்ரெஷ் சித்தரத்தை) - 2 அங்குலத் துண்டு எலுமிச்சை இலை - 2 சலாம் இலை - ஒன்று (கிடைக்கவில்லையெனில் தவிர்க்கலாம்) எண்ணெய் - பொரிப்பதற்கு சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சம்பால் செய்ய: பழுத்த மிளகாய் - 10 பச்சை மிளகாய் - 5 பூண்டு - ஒரு பல் தக்காளி - ஒன்று சர்க்கரை (சீனி) - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூண்டு

மஞ்சள் மற்றும் தனியா விதையை அரைத்துக் கொள்ளவும். (மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை).

அரைத்த கலவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி

லெங்குவாஸ்

இஞ்சி

எலுமிச்சை இலை

சலாம் இலை

உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் கோழித் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். (லெங்குவாஸ்

இஞ்சி ஆகியவற்றை லேசாக இடித்தும்

எலுமிச்சை

சலாம் இலைகளை கையால் கசக்கியும் சேர்க்கவும்).

வெந்த கோழித் துண்டுகளை தனியாக எடுத்து

எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்.

சம்பால் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.

கோழி பொரித்த எண்ணெயில் அரைத்த மிளகாய் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். (ஒரு மேசைக்கரண்டி எண்ணெயே போதுமானது).

பொரித்தெடுத்த கோழித்துண்டுகள் மீது சம்பாலை வைத்து வெள்ளரித் துண்டுகள் மற்றும் சாதத்துடன் பரிமாறவும். கோழி வேகவைத்த தண்ணீரை வடிகட்டி சூப்பாக பருகலாம்.

குறிப்புகள்: