ஷாஹி பனீர்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனீர் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி - சிறிதளவு தயிர் - கால் கப் மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி சீரக தூள் - கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி முந்திரி - 10 கோவா - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பனீரை சிறிதளவு எண்ணெய் விட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். எண்ணெயில் பொரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

வெங்காயத்தை எண்ணெயில்லாமல் வதக்கவும். கொதிக்கும் தண்ணீரில் தக்காளி சேர்த்து தோலுரித்து வைக்கவும். வெங்காயம்

இஞ்சியை ஒன்றாக அரைத்து வைக்கவும். தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும்.

பிறகு தக்காளி விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின்பு தயிர் (புளிக்காத தயிர் இருந்தால் நல்லது) சேர்த்து கிளறவும்.

இரண்டு நிமிடம் சென்ற பின்பு உப்பு மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து கிளறவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும்.

மசாலா வாசம் அடங்கிய பின்னர் பனீரை சேர்க்கவும். தீயை குறைத்து மிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

பனீர் சேர்த்து பத்து நிமிடம் கொதித்ததும் முந்திரி மற்றும் கோவாவை அரைத்து சேர்க்கவும். (கோவா இல்லையென்றால் பால் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே இரண்டு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கவும். )

ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான ஷாஹி பனீர் ரெடி. இது நாண்

சப்பாத்தி ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ்.

குறிப்புகள்: